search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து முடக்கம்"

    • நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
    • தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள பல ஓடைகள் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடித்தன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மிச்சாங் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடும் வெள்ளம் சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது.

    திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை அருகே உள்ள கோகுல் கிருஷ்ணா என்ஜினியரிங் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்துக்கு வெள்ளநீர் செல்கிறது. மேலும் சூலூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள கலங்கிய ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வெள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக சென்னை- நெல்லூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் சாலையில் இருபுறமும் நின்று வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

    நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.

    அனைத்து வாகனங்களும் சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து திருப்பி விடப்பட்டன.

    தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள பல ஓடைகள் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடித்தன. பல இடங்களில் தாழ்வான பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை-நெல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன.

    இந்த வழியாக யாரும் பயணம் செய்ய வேண்டாம் என திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

    • 2 கி.மீ. தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் படு மோசமாக சாலைகள் உள்ளது.
    • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லக்கூடிய சாலை போக்குவரத்து முக்கி–யத்துவம் வாய்ந்ததாகும். குமார் நகரில் தொடங்கி சாமுண்டிபுரம் வரை உள்ள குடியிருப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குமார் நகர் பள்ளிக்கூடம், செல்லம்மாள் காலனி பள்ளிக்கூடம் மற்றும் தனியார் மருத்துவம–னைகளும் இந்த பகுதியில் உள்ளன. பெரும்பாலும் பனியன் தொழிலாளர்கள் குடும்பங்களும், தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர் வீரபாண்டியில் இருந்து 15 வேலம்பாளையம் வரை செல்லக்கூடிய 1 ஏ/பி என்ற வழித்தடப் பேருந்து இந்த வழியில் இயங்கி வந்தது. அத்துடன் காவிலிபாளையம் மற்றும் வஞ்சிபாளையம் செல்லக்கூடிய சில பேருந்துகளும் இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா பொது முடக்கத்தின்போது 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த சாலையிலும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை 27 மாதங்களுக்கு மேலாக பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த சாலையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட 4- குடிநீர் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக குழாய்கள் பதிக்கும் பணியை மேற்கொண்டதே ஆகும். இத்தகைய பணிகள் செய்தால் முடிந்தவுடன் சாலைகளைச் செப்பனிட வேண்டும். ஆனால் இந்த சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில், படு மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. மக்கள் நடந்து செல்வ தற்குக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த மாமன்ற கூட்டத்தில், இப்பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், நாகராஜ், குணசேகரன், தங்கராஜ் உள்ளிட்டோர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 2 ஆண்டு காலமாக போக்குவரத்து முடங்கியிருக்கும் நிலையில் இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினர். மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைபிடிக்காமல், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த பகுதியில் மீண்டும் பேருந்து போக்குவரத்து நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து அதே நிலை நீடிப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு திருக்குமரன் நகர் 1-வது வீதியில் சாக்கடை வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது," எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் சாக்கடை வசதி இல்லை. இதனால் வீட்டின் கழிவுநீர் அனை–த்தும் வீதிகளில் தேங்கி, சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. நாள்தோறும் தேங்கிநிற்கும் நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொந்தரவு மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. ஆகவே எங்கள் பகுதியில் சாக்கடை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றனர்.

    மும்பையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகள், தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து முடங்கியுள்ளது. #MumbaiRains
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர். 

    ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருவதால் அத்தியாவசிய சேவைகளும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான டப்பாவாலாக்கள் இன்று தங்களது வேலையை நிறுத்தி வைத்துள்ளனர். ரெயில் நிலையங்களை சூழ்ந்துள்ள மழை நீர் விரைவில் அகற்றப்படும் எனவும், படிப்படியாக ரெயில் சேவை சீரடையும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
    ×